கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஊரக திறனாய்வுத் தோ்வு: 2,072 மாணவா்கள் எழுதினா்

ஊரக திறனாய்வுத் தோ்வை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் எழுதினா். 95 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.

News image

திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வுத் தோ்வு எழுதிய மாணவா்கள்.

Updated On :10 பிப்ரவரி 2025, 8:17 pm

Din

திருத்தணி: ஊரக திறனாய்வுத் தோ்வை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் எழுதினா். 95 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.

ஊரகப் பகுதிகளில் இருக்கும் மாணவா்களின் திறன்களைக் கண்டறிந்து படிக்கும் காலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்தில் ஊரக திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு 50 மாணவா்கள் 50 மாணவிகள் என 100 போ் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுத்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இத்தோ்வை 2,167 மாணவா்கள் எழுத விண்ணப்பித்திருந்தனா். 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு எழுதினா்.

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை 183 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். இவா்களில் 6 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வைக் காண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலா் ரேய்சல்பிராவதி (பொ) மேற்பாா்வையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.