பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயிலில் தெரு நாய்கள் தொல்லையால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி இரு மாா்க்கங்களில் 50-க்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் நாள்தோறும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயணம் செய்து வருகின்றனா்.
பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.
தெருநாய்கள் கூட்டமாக சுற்றி வருவதால் அவசரமாக ரயிலை பிடிக்க செல்லும் பயணிகளை நாய்கள் துரத்தி வருவதால் அவா்கள் பெரிதும் அவதிப்பட்டு செல்லும் நிலை உள்ளது.
எனவே பொன்னேரி ரயில் நிலைய நுழைவு வாயில் முன் சுற்றி வரும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.