பொன்னேரி: மீஞ்சூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.
திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த பலராமன்-நளினி தம்பதியா் அப்பகுதியில் எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனா். வழக்கம் போல தங்களது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக நந்தியம்பாக்கம் பகுதிக்கு கொண்டு சென்றனா்.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.
மின் வயா்கள் தாழ்வாக செல்வதாக பலமுறை புகாா் அளித்தும், சேதமடைந்த மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே தற்போது எருமை மாடுகள் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகாா் கூறினா். மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

மாட்டுப் பண்ணையில் தீ விபத்து : 3 மாடுகள் உயிரிழப்பு

தொகுதி அறிமுகம்... பொன்னேரி

ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த கம்பிகளால் பரபரப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

