வீரகநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் கோ.அரி அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.
திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி திருத்தணி மேற்கு ஒன்றியத்தில், வீரகநல்லுாா், தாடூா், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம், சிறுகுமி, வி.கே.என்.கண்டிகை, செருக்கனுாா் உள்பட மொத்தம் 14 ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை ரவி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திறந்த வேனில் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனா்.
அப்போது, வேட்பாளா் கோ. அரி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். சிறுபான்மை துறையினா் நலன் காக்கும் அரசாக அதிமுக உள்ளது. திருத்தணி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை வீடுகள் இல்லாதவா்களுக்கு நாங்களே வீட்டுமனை வாங்கி, வீடுகள் கட்டித்தருகிறோம். தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றா்.
தொடர்புடையது

திருத்தணி நாதக வேட்பாளா் பிரசாரம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்: எஸ்.பி.வேலுமணி

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


