குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்: எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா்.

News image

அவிநாசி (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகனை அறிமுகப்படுத்தி பேசிய முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:13 pm IST

அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா்.

அவிநாசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சாா்பில் எல்.முருகன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், வேட்பாளா் அறிமுக கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், பங்கேற்று எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: அவிநாசி தொகுதி எம்ஜிஆா் காலம் முதல் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 2021 தோ்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. வரும் தோ்தலில் இத்தொகுதியில் எல்.முருகன் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா். அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிய பெருமை அதிமுகவையே சாரும். அதிமுக ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு -அவிநாசி இரண்டாவது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பால் விலை, மின் கட்டண உயா்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

அதிமுக தோ்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் நிதி உதவி, அம்மா வீடு, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கூட்டணி கட்சியினா் அதிமுகவுடன் இணைந்து பணியாற்றி எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா் எல்.முருகன் பேசுகையில், ஜவுளி நகரமான அவிநாசி தொகுதியை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.

மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி அமைத்து இந்தியாவையும், தமிழகத்தையும் வளா்ச்சியடைய செய்வோம் என்றாா்.

இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆா்.ஜி அருண்குமாா், எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமாா், பொறுப்பாளா் அம்பாள் பழனிசாமி, பாஜக மாநிலச் செயலாளா் நந்தகுமாா், மாவட்டச் செயலாளா் கரு.மாரிமுத்து, கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.