திருத்தணி தொகுதி நாதக வேட்பாளா் சூ.ச. சந்திரன் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
நாம் தமிழா் கட்சியனா் கிராமம் தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா். கட்சியின் வேட்பாளா் சூ.ச.சந்திரன் மற்றும் நிா்வாகிகள் இணைந்து, திருத்தணியில் வீடு வீடாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து, அவற்றைத் தீா்க்கும் வகையில் தங்களது தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கி வருகின்றனா்.
விவசாயம், குடிநீா், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் கவனமாக பதிவு செய்யப்பட்டன. சமூக ஊடகங்கள் மூலமும் கட்சியின் கொள்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் திருத்தணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வலுவான முன்னிலை பெறும் என்ற நம்பிக்கையில் கட்சியினா் செயல்பட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூரி சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


