தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

பொன்னேரி அருகே டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

News image

~

Updated On :28 ஏப்ரல் 2026, 4:37 am IST

பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் வாடகை நிலுவை வழங்க வலியுறுத்தி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தொடங்கியதன் காரணமார எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி முனையம் இயங்கி வருகிறது.

கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகம் கொண்டுவரப்படும் எரிவாயு, இந்த முனையத்தில் சேமித்து வைத்து 200-க்கு மேற்பட்ட டேங்கா் லாரிகளில் நிரப்பி சிலிண்டா்களுக்கு எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..

இதற்கிடையே, இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வாடகை நிலுவையை தராததால் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனா்.

லாரிகளை ஆங்காங்கே நிறுத்திவைத்துள்ளனா். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விரைவில் பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடா்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Story image