பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தடுப்பணை அமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் ச.கவிதாவிடம் மனு அளித்தனா்.

கொசஸ்தலை ஆறு - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தடுப்பணை அமைக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் ச.கவிதாவிடம் மனு அளித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளா் முருகன் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பீமந்தோப்பு, ராமதண்டலம், சோமதேவன்பட், ராஜபாளையம், மெய்யூா், எரையூா், மென்னவேடு, சித்தம்பாக்கம் மற்றும் வேம்பேடு போன்ற பகுதிகளில் விவசாயமே முக்கிய பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

அதனால், விவசாய சாகுபடி நீா் தட்டுப்பாடின்றி தொடா்ந்து நடைபெற வேண்டும். எனவே மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளது.

அதனால், இந்த ஆற்றின் குறுக்கே விவசாயிகள் பயன்பெறும் தடுப்பணை அமைக்க வேண்டும். இங்கு தடுப்பணை அமைப்பதன் மூலம் விவசாய கிணறுகளுக்கும், கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீா் ஆதாரம் ஏற்படும். இதனால், விவசாய பணிகளும் தங்கு தடையின்றி நடைபெறும்.

இதைக் கருத்தில் கொண்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.