FOLLOW US

ON GOOGLE DISCOVER

பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்ததற்கு இதுதான் காரணம்! அமைச்சர் விளக்கம்

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்தது குறித்து பேரவையில் அமைச்சர் விளக்கம்...

rajeev

அமைச்சர் ராஜீவ் - TN assembly

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:01 pm IST

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பேரவையில் விளக்கமளித்தார்.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இன்று பேரவையில் பேசினார்.

அப்போது, எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலைக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதால் நீரும் மஞ்சள் நிறமாக மாறுவதால் இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், "கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறப்பு குறித்து திருவொற்றியூர் எம்எல்ஏ எனக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கீழ் உள்ள அமைப்பு, 5 இடங்களில் ஆய்வு செய்தார்கள்.

இதில் 2 இடங்களில் ஆக்சிஜன் (dissolved oxygen) அளவு குறைவாக இருந்தது. மனித கழிவுகள் அந்த இடத்தில் கலந்திருக்கலாம் என்று ஆய்வு சொல்கிறது.

இதற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் இல்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இறந்த மீன்கள் ஆய்வுக்காக கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது, பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.

இது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். பரிசோதனை முடிவுகள் வந்ததும் பேரவையில் தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

Summary

This is the reason for the fish deaths in the Kosasthalai River: Minister explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.