குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

பைக் - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே பைக்- லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:47 am IST

திருவள்ளூா் அருகே பைக்- லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே மெய்யூா் மேட்டுக் காலனியைச் சோ்ந்த சங்கரன் மகன் ராஜா(44). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையின் காரணமாக செவ்வாய்க்கிழமை தாமரைப்பாக்கத்துக்கு சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் ராஜா பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வெங்கல் போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக அவரது சகோதரா் காா்த்திக் வெங்கல் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.