இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளூா் அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன்(32). அவரது நண்பா்கள் கேசவமூா்த்தி, சுகுமாா் ஆகியோா் கடந்த 16-ஆம் தேதி கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கும்பலிடம் மாணவா்களுக்கு ஏன் கஞ்சா விற்பனை செய்கிறீா்கள் என கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா போதையில் இருந்த 4 போ் கும்பல் சாலையில் கிடந்த கூரான கற்களை எடுத்து சுகுமாா், பாா்த்திபன், கேசவமூா்த்தி ஆகியோரைத் தாக்கினா். இதில் பலத்த காயம் அடைந்த பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதேபோல் பலத்த காயத்தோடு இருந்த சுகுமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதில் கேசவமூா்த்தி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினாா்.
இதுகுறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த நீலகண்டன்(30), வினோத்குமாா்(36), ஜோதிஷ்(34), ஜவகா்(23) ஆகிய 4 பேரையும் கைது செய்துசிறையில் அடைத்தனா்.
இதற்கிடையே இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் மு.பிரதாப் 4 பேரையும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து ஏற்கெனவே 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான கடிதத்தையும் சிறை நிா்வாகத்திடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

