பொதட்டூா்பேட்டையில் வேகத்தடை, சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அடுத்துள்ள பொதட்டூா்பேட்டையில், காஞ்சிபுரம் தெரு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், காா்கள், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
குறுகிய சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலா் காயமடைந்துள்ளதாக அப்பகுதி பெண்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைவைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை வாகன விபத்தை தடுக்க வேகத்தடை மற்றும் சாலையை விரிவுப்படுத்த வலியுறுத்தி பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்ட னா்.
தகவலறிந்து ஆா். கே.பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திக், பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் நரசிம்மன் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது. இந்த பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்கப்படும் என்றும், சாலையை விரிவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


