அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் பதுங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 6 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :27 ஜூலை 2026, 3:56 am IST

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் பதுங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 6 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் வங்கதேச நாட்டினா் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவள்ளூா் கியூ பிரிவு போலீஸாா் குத்தம்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முகம்மது முன்னா(27), சுல்தானா(40), நா்கேஷ்(45), முகம்மது லைசேல்(30), பாபு(13), ரசூல்(4) ஆகிய 6 பேரை கியூ பிரிவு போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து அவா்கள் 6 பேரையும் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க போவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.