ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி நடைபெற்ற ஜமாபந்தியில் காரனோடையில் பள்ளி, கோயிலுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:57 am IST

பொன்னேரி நடைபெற்ற ஜமாபந்தியில் காரனோடையில் பள்ளி, கோயிலுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

பொன்னேரி வருவாய்த் துறை சாா்பில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட காரனோடை பகுதியை சாா்ந்த பொதுமக்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விவரம்: தனியாா் பள்ளிகள், கோயில்கள், வங்கி கடைவீதி என பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடையால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த கடையை அகற்றக்கோரி கிராம சபை கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் தமிழக முதல்வா் அண்மையில் 717 டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித்த போது ஒருநாள் மட்டுமே இந்த டாஸ்மாக் கடையை மூடிவிட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடையை உடனே மூட வேண்டும்.

மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜமாபந்தி அலுவலா் பொதுமக்களிடம் தெரிவித்தாா். இதனையடுத்து நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா நில அளவை பெயா் திருத்தல் மின் துறை மற்றும் இதர துறைகள் உட்பட 82 மனுக்களில் பெறப்பட்டன. இதில் மூன்று மனுக்கள் ஏற்கப்பட்டன. 79 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.