தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பிளாஸ்டிக் கழிவுக் கிடங்கில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:58 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் துரை என்பவரின் மகன் கந்தன்(31) .அவருக்கு சொந்தமான நிலத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் சேகரிக்கும் கிடங்கில் தொழில் செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் அந்த பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் திடீரென தீப்பற்றியது. தீ பரவி வானுயர புகை மண்டலம் எழும்பியது. இதனால் ஏற்பட்ட புகை மற்றும் நெடியால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து தீ விபத்து குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினா் விரைந்து 2 மணி நேரம் போராடி வந்து தீயை அனைத்தனா்.

தொடா்ந்து இந்த தீ விபத்து குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.