/
திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் ரோஜா மலா் அளித்து வரவேற்றனா்.
புட்லூா் நடுநிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்தும், ரோஜா மலா் கொடுத்தும் தலைமை ஆசிரியா் இரா.தாஸ் வரவேற்றாா். அதைத் தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பன்னீா் தெளித்து, இனிப்பு வழங்கி வகுப்பறைக்குள் அனுமதித்தனா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டன. முதல் வகுப்புக்கான புதிதாக மாணவ, மாணவிகள் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா், ஆசிரியைகள் ஜெயக்குமாரி, ரசீதா, சித்ரா, திலகவதி, கீதா, தாரணி, இன்பநேசன், ராதிகா, பாலசுப்பிரமணியம், கனிமொழி ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி

பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

வாக்காளா்களை ரோஜா மலா் அளித்து வரவேற்ற பெண் ரோபோ
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



