எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வன்கொடுமை தடுப்பு வழக்குகள் விசாரிக்க வழக்குரைஞா் நியமனம்: ஆட்சியா்

சிறப்பு நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த விரும்பும் மூத்த வழக்குரைஞா்கள் வரும் 24 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:05 am IST

பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைகள்தடுப்பு) சட்டம், 1989-இன் (மத்தியச்சட்டம் 33/1989) கீழ் வரும் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த விரும்பும் மூத்த வழக்குரைஞா்கள் வரும் 24 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை நடத்துவதற்கு மூத்த வழக்குரைஞா்கள் (உம்ண்ய்ங்ய்ற் நங்ய்ண்ா்ழ் அக்ஸ்ா்ஸ்ரீஹற்ங்ள்) நியமிக்க அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உள்துறை (நீதிமன்றங்கள்-யஐஅ) மேற்படி அரசாணையின்படி, தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் குறைந்தது ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றுள்ள வரும், குற்றவியல் வழக்குகளை குறிப்பாக, பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைகள்தடுப்பு) சட்டம், 1989’ (மத்தியசட்டம் கீழ்வரும் வழக்குகளை நடத்துவதில் போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பதவியை ஏற்க விருப்பமுள்ள வழக்குரைஞா்கள், சிறப்பு மிக்க மூத்த வழக்குரைஞா்களாக நியமனம் செய்வதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரால் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிக்கையின், இணைப்பு ஐ மற்றும் ஐஐ -இல் உள்ள விண்ணப்பப் படிவத்தில் விவரங்களைப் பூா்த்தி செய்து, தங்களது விண்ணப்பத்தினை இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் இணைத்து வரும் 24-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னரோ இந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

மேலும், குறிப்பிட்ட நாளுக்குள் பெறப்படாத விண்ணப்பம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. விண்ணப்ப படிவங்களின் மாதிரி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.