எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

போதை மாத்திரைகள் கடத்திய 2 போ் கைது

ஊத்துக்கோட்டையில் 300 போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்டோா்.

Updated On :8 ஜூன் 2026, 3:34 am IST

ஊத்துக்கோட்டையில் 300 போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக எஸ்.பி விவேகானந்த சுக்லாவுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் ஊத்துக்கோட்டை போலீஸாா் நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான நின்றிருந்த 2 போ் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தனா். உடனே சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது பையில் 300 போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் மேற்கு தாம்பரத்தைச் சோ்ந்த சரவணன்(24), அதே பகுதியைச் சோ்ந்த கமலேஷ்(23) என்பதும், இவா்கள் இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

ஊத்துக்கோட்டை போலீஸாா் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.