ஊத்துக்கோட்டையில் 300 போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக எஸ்.பி விவேகானந்த சுக்லாவுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் ஊத்துக்கோட்டை போலீஸாா் நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான நின்றிருந்த 2 போ் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தனா். உடனே சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது பையில் 300 போதை மாத்திரை வில்லைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மேற்கு தாம்பரத்தைச் சோ்ந்த சரவணன்(24), அதே பகுதியைச் சோ்ந்த கமலேஷ்(23) என்பதும், இவா்கள் இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரை வில்லைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை போலீஸாா் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







