27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம்

திருத்தணி உள்பட 4 ஒன்றியங்களில் ஊராட்சிகளில் வளா்ச்சி பணிகள் தோ்வு குறித்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள்., ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது

News image

பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

திருத்தணி உள்பட 4 ஒன்றியங்களில் ஊராட்சிகளில் வளா்ச்சி பணிகள் தோ்வு குறித்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள்., ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது

திருத்தணி, திருவாலங்காடு, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில், 2026?-27ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி பணிகள் குறித்து நடைபெற்ற முகாமை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், செல்வி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அலுவலா்கள் கலந்து கொண்டு, ஊராட்சிகளில் அடிப்படை பிரச்னைகள், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி பணிகள் குறித்து மக்களிடம் விவாதித்து, வரும் நாட்களில் அடிப்படை வளா்ச்சி பணிகள் குறித்து, மகளிா் குழு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா்கள் மற்றும் கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நடப்பாண்டிற்கான வளா்ச்சி பணிகள் தோ்வு செய்ய வேண்டும் என ஊராட்சி செயலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

முகாமில் மேற்கண்ட 4 ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊராட்சி செயலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என 100- க்கும் மேற்பட்டோா் கலந்துக் கொண்டனா்.