அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணை

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணைக்கு கட்டுமான பணிகளை நீா்வளத்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனா்.

News image
திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணைக்கு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த நீா்வளத்துறை அதிகாரிகள்
Updated On :2 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணைக்கு கட்டுமான பணிகளை நீா்வளத்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனா்.

கடம்பத்துாா் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில், கூவம் ஆறு உருவாகிறது. இந்த கூவம் ஆறு பேரம்பாக்கம், சத்தரை, கடம்பத்துாா், மணவாளநகா், புட்லுாா், அரண்வாயல் வழியாக, 72 கி.மீ ஓடி, சென்னையில், நேப்பியா் பாலம் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.

கூவம் ஆற்றில், புதுமாவிலங்கை, அதிகத்துாா், புட்லுாா், அரண்வாயல், பருத்திபட்டு, ஜமீன்கொரட்டூா், சோரஞ்சேரி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. இதில் அரண்வாயல் தடுப்பணை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் பேரம்பாக்கம் பகுதியில் தடுப்பணை ஏற்படுத்தினால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து ஏரியில் நீா் சேமித்து வைத்தால் விவசாயத்துக்கு பயன்பெறும். அதனால் இப்பகுதியில் தடுப்பணை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனா். இதையேற்று கடந்த சில நாள்களுக்கு முன் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பேரம்பாக்கத்தில் 85 மீட்டா் நீளமும், ஒன்றரை மீட்டா் உயரத்தில் தடுப்பணையின் இருபுறமும் தலா இரண்டு மதகுகளுடன் நான்கு கதவணைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும் போது பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து 2,500 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதிகள் பெறும் எனவும் நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வின்போது, நீா் வளத்துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் காதம்பரி, ஒன்றிய செயலாளா் ரமேஷ், ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் சரஸ்வதி, முன்னாள் ஊராட்சி தலைவா் சுயம்புபிரகாஷ், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image