பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

நலமான இளைஞா்கள் வளமான இந்தியா என்ற நோக்கத்தில் திருத்தணி வட்டம், மோட்டூா் கிராமம், அருங்குளம் கண்டிகை மற்றும் அருங்குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா்.

நிகழ்வுக்கு முதல்வா் ஏகாதேவசேனா (பொ) தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியா் ஹேமநாதன் வரவேற்றாா். இ.எஸ்.எஸ்., சுப்பிரமணியம் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.பி.எஸ். விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் திட்ட அலுவலா்கள் பேராசியா்கள் சத்யபிரியா, தேவராஜ், தீனதயாளன் கலந்து கொண்டனா்.