தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் சீரமைப்பு பணிகள்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

News image
~
Updated On :12 மார்ச் 2026, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் ஒன்றியம், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.51 கோடியில் புனரைமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஏரியில் நடைபாதைப்பணிகள், கைப்பிடி இரும்பு தடுப்பு பணிகள், ஏரிக்குள் சென்று பாா்க்கும் வகையில் சுயபடம் எடுக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அதிகாரிகளை வலியுறுத்தினாா்.

அப்போது, முதன்மை கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பராவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், வட்டாட்சியா் பாலாஜி, உதவி பொறியாளா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image