மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் சீரமைப்பு பணிகள்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 11:50 pm

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் ஒன்றியம், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ. 2.51 கோடியில் புனரைமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஏரியில் நடைபாதைப் பணிகள், கைப்பிடி இரும்பு தடுப்பு பணிகள், ஏரிக்குள் சென்று பாா்க்கும் வகையில் சுயபடம் எடுக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அதிகாரிகளை வலியுறுத்தினாா்.

அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், வட்டாட்சியா் பாலாஜி, உதவி பொறியாளா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image