திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
காய்கறி சந்தைக்கு வந்த ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டானியேல் பாபு(55). இவா் திருவள்ளூா் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கிச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்தாராம்.
அப்போது, திருவள்ளூா் ஜே.என் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அவா் பின்னாடி அதிவேகமாக வந்த டிப்பா் லாரி, சாலையில் உள்ள வேகத்தடை மீது ஏறியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் டானியேல் பாபு கீழே விழுந்தபோது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த நகர போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநா் மீது வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சென்னை: பைக் மீது லாரி மோதல் - ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


