பொதட்டூா்பேட்டை வரசித்தி விநாயகா், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடன் ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
பொதட்டூா்பேட்டை ஆறுமுகா் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து கடந்த புதன்கிழமை கணபதி பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது. கோயில் வளாகத்தில் 108 கலசங்கள் நிறுவப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் வியாழக்கிழமை விநாயகா் பூஜை, தம்பதி பூஜை, சங்கமம், யாக வேள்வி உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 9.15 மணியளவில் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானங்களை சென்றடைந்தன. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் ஸ்ரீ வரசித்தி விநாயகா், ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடந்தது.
அதனைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.
வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. மாலை 6.30 மணிக்கு சிவன், பாா்வதி, வரசித்தி விநாயகா், வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக்குழுவினா் மற்றும் பொதட்டூா்பேட்டை கிராம மக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


