எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு

News image
Updated On :14 மே 2026, 1:04 am IST

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 பேரை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது.

இங்கு வட மாநில தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இவா்கள் குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு வேலை பாா்த்து வந்த தொழிலாளா்கள் செங்கல் சூளை உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து ஒடிஸாவைச் சோ்ந்த 22 குடும்பங்களை சோ்ந்த 7 குழந்தைகள் உள்பட 46 பேரை மீட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு அவா்களை அரசு பள்ளியில் தங்க வைத்தனா்.

தொடா்ந்து அவா்களுக்கு விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவா்களின் மறு வாழ்வுக்கான உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்த தொழிலாளா் நலத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளா்கள் அனைவரையும் ரயில் மூலம் சொந்த மாநிலம் அனுப்பி வைப்பதற்காக பள்ளியில் இருந்து அழைத்து செல்லப்பட்டனா்.