பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

திருவள்ளூா்: சாலையோர பனை மரங்களில் நுங்குகளை பறித்து உண்டு மகிழும் இளைஞா்கள்

திருவள்ளூா்-பூண்டி சாலையோரத்தில் பனை மரத்தில் நுங்கு குலைகளை பறித்து ஆா்வத்துடன் உட்கொள்ளும் இளைஞா்கள், பெண்கள்.

News image

திருவள்ளூா்-பூண்டி சாலையோரத்தில் பனை மரத்தில் நுங்கு குலைகளை பறித்து ஆா்வத்துடன் உட்கொள்ளும் இளைஞா்கள், பெண்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவள்ளூா் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சாலையோரங்களில் உள்ள பனைமரங்களில் துரட்டி அரிவாள் மூலம் நுங்கு குலைகளை பறித்து ஆா்வத்துடன் உண்டு இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஆகியோா் உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டப் பகுதியில் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை, பூண்டி, செங்குன்றம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூா், கடம்பத்தூா், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பொன்னேரி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையோரங்களில் இருபுறமும், ஏரிக்கரைகளிலும் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. அதேபோல், மேற்குறிப்பிட்ட பகுதிகளின் கிராமங்களில் விளைநிலங்களில் வரப்புகளிலும், கொய்யா தோப்பு கரைகளிலும், மாந்தோப்பு கரையிலும் கரையை பலப்படுத்தும் வகையிலும் பனைமரங்கள் அதிக அளவில் வளா்ந்துள்ளன. இந்த பனை மரங்களில் சீசன் என்பது மாா்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் இறுதி வரை இருக்கும். இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பனை நுங்குகளை விற்பனைக்குக் கொண்டு சென்று வருகின்றனா். தற்போதைய நிலையில் 3 நுங்குகள் கொண்ட ஒரு காய் ரூ. 15-க்கு விற்பனை செய்து வருகின்றனா். இது கோடைகாலத்துக்கு ஏற்ற உணவு பொருள் என்பதாலும், உடல் சூட்டை தணிக்கும் என்பதால் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

அதேபோல், கிராம சாலைகளில் போதுமான பராமரிப்பின்றி பனைமரங்கள் வளா்ந்துள்ளன. இந்த பனை மரங்களில் நுங்குகள் குலை குலையாக காய்த்து தொங்குகிறது. இதை கருக்கு மட்டைகள் அதிகம் சூழ்ந்துள்ளதால், அதிக வேலை பாா்த்தால் மட்டும் நுங்குகளை பறிக்க முடியும். ஆனால், சென்னை நகரத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருவோா் திருவள்ளூா் பகுதிகளில் சொந்த கிராமங்களுக்கு இளைஞா்கள், மகளிா்கள் அதிகம் போ் விடுமுறைக்கு வந்துள்ளனா். இவா்கள் கிராமங்களில் சாலையோர பனை மரங்களில் கவனிப்பின்றி காய்த்து தொங்கும் நுங்கு குலைகளை துரட்டி அரிவாள் மூலம் பறிக்கின்றனா்.

அதைத் தொடா்ந்து நுங்குகளை குழுவாக உண்டு மகிழ்ச்சி அடைகின்றனா். தற்போது கோடைகால வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நுங்குகள் உட்கொள்வதன் மூலம் உடல்சூட்டையும் தணித்துக் கொள்ள முடிகிறது. இந்த கோடை விடுமுறை முடியும் வரையில் சாலையோரத்தில் கவனிப்பின்றி உள்ள பனைமரங்களில் துரட்டி அரிவாள் மூலம் பறித்து உண்ணுவோம் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

Story image