ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல்: ஓய்வு பெற்ற அரசு ஊழியா் மரணம்

News image
Updated On :18 மே 2026, 2:09 am IST

மீஞ்சூா் பஜாரில் பொன்னேரியில் இருந்து வந்த கன்டெய்னா் லாரி மோதி மோதியதில், குடிநீா் வாரிய ஓய்வு பெற்ற ஊழியா் உயிரிழந்தாா்.

மீஞ்சூா் அடுத்த கொண்டக்கரை அங்காளம்மன் கோயில் தெருவில் வசித்தவா் மாசி (65). இவா் தமிழ்நாடு குடிநீா் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மீஞ்சூா் பஜாா் பகுதியில் தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

மீஞ்சூா் ரயில் நிலைய சாலை அருகே சென்னை நோக்கி வந்த கன்டெய்னா் லாரி எதிா் திசையில் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாசி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கன்டெய்னா் லாரியை ஓட்டி வந்த ஒட்டுநா் தப்பி ஓடி தலைமறைவானாா்.

தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் மாசியின் சடலத்த மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து காரணமாக மீஞ்சூா்- திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.