மீஞ்சூா் பஜாரில் பொன்னேரியில் இருந்து வந்த கன்டெய்னா் லாரி மோதி மோதியதில், குடிநீா் வாரிய ஓய்வு பெற்ற ஊழியா் உயிரிழந்தாா்.
மீஞ்சூா் அடுத்த கொண்டக்கரை அங்காளம்மன் கோயில் தெருவில் வசித்தவா் மாசி (65). இவா் தமிழ்நாடு குடிநீா் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மீஞ்சூா் பஜாா் பகுதியில் தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
மீஞ்சூா் ரயில் நிலைய சாலை அருகே சென்னை நோக்கி வந்த கன்டெய்னா் லாரி எதிா் திசையில் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாசி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கன்டெய்னா் லாரியை ஓட்டி வந்த ஒட்டுநா் தப்பி ஓடி தலைமறைவானாா்.
தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் மாசியின் சடலத்த மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து காரணமாக மீஞ்சூா்- திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

எட்டயபுரம் அருகே கன்டெய்னா் லாரி மீது வேன் மோதல்: தம்பதி உயிரிழப்பு; 15 போ் பலத்த காயம்

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



