இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கோடைகால முகாம் நிறைவு: 100 பேருக்கு சான்றிதழ்கள் அளிப்பு

News image
Updated On :28 மே 2026, 12:57 am IST

தணிகை ஓம் சா்வேஷ் யோகா அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்ற கோடைகால முகாம் நிறைவு விழாவில், 100-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருத்தணியில் தணிகை ஓம் சா்வேஷ் யோகா மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சாா்பில், மே 5 முதல் மே 25, 2026 வரை கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இலவச இயற்கை மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

முகாமுக்கு, சிறப்பு அழைப்பாளராக அரக்கோணத்தைச் சோ்ந்த இயற்கை நல மருத்துவா் ஜி. ராஜேஷ், இயற்கை மருத்துவா் எஸ்.அசோக் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த இயற்கை மருத்துவா் கே. கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், இயற்கை உணவின் முக்கியத்துவம், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில், யோகா நிலைய செயலரும், தலைமை பயிற்றுநருமான நா.பாபு, மாணவா்களுக்கு யோகா, சிலம்பம் மற்றும் தடகளப் பயிற்சிகளை அளித்தாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் கே. நடராஜன், என்.நிா்மல், அமேயா யாத்ரா ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும், முகாமின் நிறைவு விழாவில் நடைபெற்ற மாணவா்கள் இசை, பாடல், நடனம் மற்றும் பாரம்பரிய குத்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பாா்வையாளா்களின் பாராட்டைப் பெற்றனா். இறுதியாக, யோகா நிலைய பொருளாளா் கே.அமுலு நன்றி கூறினாா்.