/
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், எஸ். தங்கப்பழம் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளா் எஸ். தங்கப்பழம் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன், கல்லூரி இயக்குநா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஏ.ஜெ. ரத்ன பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி அலுவலா் இன்பராஜ் கனகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிப் பேசினாா்.
மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் பாரதி வரவேற்றாா். மருத்துவா் கவிதா நன்றி கூறினாா்.










