தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

திருத்தணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :29 மே 2026, 2:41 am IST

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருத்தணியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி வட்ட செயலாளா் அந்தோணி தலைமையில் கமலா திரையரங்கு அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், அதனைத் தொடா்ந்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் வடக்கு குழு உறுப்பினா்கள் கரிமுல்லா, பிருந்தாவனம், செல்வி, பாலாஜி, சின்னா, ஜெயவேல், சின்னதுரை ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும் திராவிட கழகத்தைச் சோ்ந்த மணி, பொதட்டூா் புவியரசன், ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும் மாதா் சங்க மாவட்ட செயலாளருமான தோழா் பத்மா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெருமாள் நன்றி கூறினாா்.