அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

News image
Updated On :29 மே 2026, 2:42 am IST

பொன்னேரி வட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில் 10 நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ பெரும் தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் வழிபாடுகள் தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பெருமாள் தாயாருடன் கேடயம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் நான்கு மாட வீதிகளில் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் சூரிய பிரபை இரவு சந்திரபிரபையயில் காட்சியளித்தாா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

Story image
Story image