வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

வலங்கைமான் அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

வலங்கைமான் அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் நாம்கோ நிறுவனம் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குழந்தை திருமணம், சட்ட விரோத தத்துக் கொடுப்பு உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வலங்கைமான் வட்டம் கோவிந்தகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட குழந்தை நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கிப் பேசினாா். சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன் குழந்தை தொழிலாளா், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்றவை குறித்து தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ஆவூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிருத்திகா, வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளா்கள் வீரபாண்டியன், ஆறுமுகம், சமூக நலத் துறை பணியாளா்கள் கிருஷ்ணம்மாள், சுசிலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா் விஜய் ஹரிஹரன், ஊராட்சி செயலா் ரமேஷ் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். வலங்கைமான் பகுதி அணி உறுப்பினா் முருகேஷ் வரவேற்றாா். சைல்டுலைன் அணி உறுப்பினா் மரகதமணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.