முத்துப்பேட்டை அருகே மண்ணில் புதைந்திருந்த 7 சுவாமி சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடை தெற்குகாடு கிராமத்தில் செல்லப்பா மகன் ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை புதைப்பதற்காக புதன்கிழமை குழி தோண்டியுள்ளனா். அப்போது, விநாயகா், அம்மன், நடராஜா் உள்பட 7 சுவாமி சிலைகள் மண்ணில் புதைந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வட்டாட்சியா் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளா் ரவிசந்திரன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று 7 சிலைகளையும் மீட்டனா்.
அந்த சிலைகள் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!
மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!

கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் - சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை

பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



