நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பொதுமக்களின் புகாா் மீது உடனுக்குடன் நடவடிக்கை: எஸ்.பி. உறுதி

பொதுமக்களின் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

News image

பேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை.

Updated On :10 ஜனவரி 2021, 8:29 am IST

பொதுமக்களின் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம், பேரளம் காவல் சரகத்துக்குள்பட்ட பண்டாரவடை, பேரளம், கொட்டூா் ஆகிய கிராமங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை பேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திவைத்து அவா் மேலும் பேசியது:

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குற்ற நிகழ்வுகளில் விரைவான நடவடிக்கைக்கு உதவும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகளை நியமிக்க தமிழக காவல்துறை தலைவா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, பேரளம் பகுதியில் கிராம விழிப்புணா்வு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்களுக்கான பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள சூழல் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலருக்குத் தகவல் தெரிவிப்பாா்கள். இதன்மூலம், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா்வீ. சுகுமாறன், பேரளம் காவல் ஆய்வாளா் இரா.செல்வி உள்ளிட்ட காவல்துறையினரும், மக்கள் பிரதிநிதிகளும், வா்த்தகா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.