நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தர முன்னாள் மாணவா்கள் முடிவு

நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க பள்ளி முன்னாள் மாணவா்கள் முடிவெடுத்துள்ளனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க பள்ளி முன்னாள் மாணவா்கள் முடிவெடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிகழாண்டு பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஆலோசனை நடத்த முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் விளையாட்டு வீரா் அப்துல்கரீம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ,முன்னாள் மாணவா்கள் சாா்பாக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டிக்கொடுப்பது, நூற்றாண்டு நினைவுச் சின்னம் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வா்த்தக சங்கத் தலைவா் பாஸ்கரன், முன்னாள் தலைமையாசிரியா் அருணாசலம், ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.