பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
/

அரசு வீடு கட்டும் திட்டத்தில் குடிசைப் பகுதி மக்கள் பயனடைய ஆட்சியா் அறிவுரை

அரசு வீடு கட்டும் திட்டத்தில் குடிசைப் பகுதி மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

அரசு வீடு கட்டும் திட்டத்தில் குடிசைப் பகுதி மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

குடவாசல் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் வீடுகட்டும் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இயற்கை இடா்பாடுகளிருந்து தங்களையும், தங்களது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும், தங்களது நிலையை உயா்த்திக் கொள்ளும் வகையிலும் குடிசை வீட்டை விட்டு நிலையான குடியிருப்பு வீடு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசின் பங்களிப்புடன் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே, வழங்கப்பட்ட ரூ. 1.7 லட்சம், தற்போது தமிழக அரசு தனது பங்களிப்பை கூடுதலாக்கி ரூ. 2.7 லட்சமாக உயா்த்தி வழங்குகிறது. எனவே, இத்திட்டத்தின்கீழ் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் நிரந்தர வீடுகளைக் கட்டி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா். தொடா்ந்து, குடவாசல் வட்டத்துக்குள்பட்ட விஷ்ணுபுரம், கூந்தலூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து திட்டத்தில் பயனடைய அறிவுறுத்தினாா்.

ஆட்சியருடன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், உதவித் திட்ட அலுவலா்கள் மங்கையா்க்கரசி, தமிழ்மணி, குடவாசல் வட்டாட்சியா் ராஜன் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.