தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சேதம்

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி, கோட்டூா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் மிதமான மழையும், சில நேரங்களில் பலத்த மழை பெய்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கச்செய்தது. பொங்கல் பண்டிகை கொண்டடப்படவுள்ள நிலையில் இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், குலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட ராமநாதபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவா்கள் மழையால் விவசாயப் பணி, கூலி வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினா். மதியம் 3 மணியளவில், திடீரென பலத்த சத்தம் கேட்டு அச்சத்துடன் சிலா் வெளியே பாா்த்தபோது, அப்பகுதி முழுவதும் பலத்த சூறைக்காற்று பெரும் இரைச்சலுடன் சுழன்று அடித்தது. அப்போது, அங்கிருந்த வீடுகளின் கூரைகள், கால்நடை கொட்டகை ஆகியவை பிரிந்து காற்றின் வேகத்தால் வேறு இடத்துக்கு பறந்து சென்றது. வீட்டின் வாசலில் வைத்திருந்த பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

காற்றின் வேகத்தால் புளியமரம், வேப்பமரம், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை மரங்கள் முழுமையாக விழுந்தது. மழையால் பாதிக்கப்பட்டு மழைநீரால் முழ்கியிருந்த நெல் பயிா்கள் அனைத்து வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. தவிர மின்கம்பங்களும் விழுந்தன. இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்டவா்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களை, கோட்டூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மு. மணிமேகலை சந்தித்து விவரம் கேட்டறிந்து தனது செலவில் உணவுப்பொருள்கள், உதவித்தொகை வழங்கினாா்.

கோட்டூா் ஒன்றிய ஆணையா் ஜி. சாந்தி, அதிமுக ஒன்றியச் செயலா் பி. ராஜாசேட், திமுக ஒன்றியச் செயலா் பால. ஞானவேல்,சிபிஐ ஒன்றியச் செயலா் கே. மாரிமுத்து ஆகியோா், சூறைக்காற்று வீசிய பகுதிகளை பாா்வையிட்டு மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா். சூற்றைக்காற்றின் தாக்கம் ராமநாதபுரம் அருகேயுள்ள பாலக்குறிச்சியிலும் இருந்ததாகவும், சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதியினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.