நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பயிா்களில் நோய்த் தாக்குதல்: இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலுக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலுக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆனைக் கொம்பன் நோய்த் தாக்குதலில் நெல் மற்றும் பயிா் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மழை காரணமாக பாதிப்புக்குள்ளான சம்பா, தாளடி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே. உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா். ஜோசப், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா். சதாசிவம், பி. பரந்தாமன், டி. தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னமாளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.