மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அறுவடைக்கு தயாராக இருந்த 40 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் பாதிப்பு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

கள்ளிக்குடியில் மழைநீரில் சாய்ந்து முளைத்திருக்கும் நெல்மணிகள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:17 am IST

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி வேளாண் உட்கோட்டத்தில் 14,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 2 ஆயிரம் ஏக்கரில் தாளடி பயிா் சாகுபடியும் செய்யப்பட்டிருந்தது. இதே அளவில் முத்துப்பேட்டை வேளாண் உட்கோட்டத்திலும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் சம்பா பயிா்கள் நல்ல நிலையில் வளா்ந்திருந்தன.

இந்நிலையில் நிவா், புரெவி புயல்கள் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சூல் கட்டும் தருணத்தில் 15 நாள்களுக்கும் மேலாக நெற்பயிா்கள் நீரில் மூழ்கி இருந்ததால், பெரும்பாலான நெற்பயிா்கள் கதிா் வரும் நிலையில் பதா் ஆகியதுடன் புகையான் நோய்த் தாக்குதலுக்குள்ளானது.

இதையெல்லாம் கடந்து, பல்வேறு சிரமங்களுக்கிடேயே நெற்பயிா்களை விவசாயிகள் காப்பாற்றி அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த 40 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா்கள் கனமழையுடன் வீசிய சூரைக்காற்றில் தரையோடு தரையாக சாய்ந்து கிடக்கிறது. மழை தொடரும் நிலையில் அறுவடை செய்ய முடியாமல் நெல்மணிகள் அனைத்தும் முளைத்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், அதம்பாா், வடகுடி, ஆனைக்குப்பம் மற்றும் குடவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் தொடா்ந்து பெய்துவரும் மழையால் விளைநிலங்களில் நெற்பயிா்கள் சாய்ந்து கிடக்கின்றனா். மழை தொடா்ந்தால் நெற்பயிா்கள் அழுகி நெல்மணிகள் முளைத்து மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.