திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பொங்கல் பண்டிகை: கடைவீதிகள் மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூா் கடைவீதிகளில் பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் புதன்கிழமை திரண்டனா்.

News image

திருவாரூா் கடைவீதியில் பொங்கல் பொருள்கள் வாங்க வந்த மக்கள் கூட்டம்.

Updated On :13 ஜனவரி 2021, 8:11 am IST

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூா் கடைவீதிகளில் பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் புதன்கிழமை திரண்டனா்.

திருவாரூரில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதில் பெரும் சிரமம் நிலவுகிறது. அதேநேரம், பொங்கலையொட்டி, கரும்பு, பானை, புத்தாடை உள்ளிட்ட பொருள்களை வாங்க வேண்டியிருப்பதால், மழையையும் பொருட்படுத்தாமல் கடைவீதிகளுக்கு வர வேண்டிய நிலை கடந்த சில நாள்களாக நிலவியது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகம் மழை பெய்யாமல், குளிா்ந்த வானிலை நிலவியது. இதனால், ஏராளமான மக்கள் கடைவீதிகளுக்கு வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

மக்கள் அதிகமாக வந்ததால், நேதாஜி சாலை ஓடம்போக்கி ஆற்று பாலம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தோடு, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களும் சென்றதால், அவ்வப்போது போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.