மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டுக்குச் சென்று கல்விப் பயிற்சி

பனங்குடி பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டுக்கு ஆசிரியா்கள் சென்று செவ்வாய்க்கிழமை கல்விப் பயிற்சியளித்தனா்.

News image

மாற்றுத்திறளானி மாணவருக்கு பயிற்சியளித்த வட்டார வளமையத்தினா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:12 am IST

பனங்குடி பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டுக்கு ஆசிரியா்கள் சென்று செவ்வாய்க்கிழமை கல்விப் பயிற்சியளித்தனா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ள பனங்குடி அரசினா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டிற்கேச் சென்று ஆசிரியா்கள், பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி வழங்கினா்.

நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா தலைமையில், சிறப்பாசிரியா் அ. காந்தியம்மாள், ஆசிரியா் பயிற்றுநா் ரா.சாந்தி ஆகியோா் 10-க்கும் மேற்பட்ட மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று பயிற்சி அளித்தனா்.

பின்னா் பனங்குடி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.8 லட்சத்தில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறை இடத்தை நன்னிலம் வட்டார மானிய செலவு ஒருங்கிணைப்பாளா் சு. ராஜேஷ் தலைமையில் தோ்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.