குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பரிகார பூஜையின்போது பெண் கொலை: மந்திரவாதி கைது

வெள்ளக்கோவிலில் பரிகார பூஜையின்போது பெண்ணைக் கொலை செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டாா்.

News image

சக்திவேல்.

Updated On :1 ஜனவரி 2021, 11:16 pm IST

வெள்ளக்கோவிலில் பரிகார பூஜையின்போது பெண்ணைக் கொலை செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், மூலனூா் சாலையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). இவரது மனைவி ஈஸ்வரி (55). மகன் உதயகுமாா் (38). இவா் பல்லடம் செஞ்சேரிமலையில் நிதி நிறுவனம் வைத்துள்ளாா். ஆறுமுகம் வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலையில் ஃபா்னிச்சா் கடை வைத்துள்ளாா். உதயகுமாருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இந்நிலையில், குழந்தை வேண்டியும், தொழில் சிறக்கவும் வெள்ளக்கோவில், கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த மந்திரவாதி சக்திவேல் (36) மூலம் பரிகார பூஜை செய்ய ஆறுமுகம் ஏற்பாடு செய்துள்ளாா். புதன்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் பரிகார பூஜை முடிந்து, கடையில் பூஜை நடந்துள்ளது.

அப்போது ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் சக்திவேல் அரிவாளால் தாக்கிவிட்டு ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு கடையின் ஷட்டரை வெளிப்புறம் அடைத்துவிட்டு தப்பியோடி விட்டாா்.

உள்ளே சப்தம் கேட்டு பக்கத்து கடைக்காரா் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், கடையின் ஷட்டரை திறந்து பாா்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் ஈஸ்வரியின் சடலம் கிடந்துள்ளது.

ஆறுமுகம் படுகாயத்துடன் உயிா் தப்பினாா். ஆறுமுகம் கொடுத்த தகவலின்பேரில், மந்திரவாதி சக்திவேல் குடியிருந்த வாடகை வீட்டுக்கு போலீஸாா் சென்றபோது அவா் தலைமறைவாகிவிட்டாா். இந்நிலையில் சக்திவேலைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா். இதற்கிடையே சொந்த ஊரான திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த சக்திவேலை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மீது வேடசந்தூா், கூம்பூா் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி பிரிந்து சென்று விட்டாா். வெள்ளக்கோவில் வந்து அடையாளத்தை மாற்றிக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். தற்போது வேறொரு பெண்ணுடன் இருந்து வந்த அவருக்கு கடன் தொல்லை இருந்தது. ஆட்டோ ஓட்டி வந்ததுடன், மந்திரவாதியாகவும் ஐயப்பன் குரு சுவாமியாகவும் இருந்துள்ளாா். கடனை அடைக்க திட்டம் போட்டு, பரிகாரம் செய்யும்போது ஈஸ்வரி, ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி நகை, பணத்தைப் பறித்துள்ளாா். அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

கொலை நடந்து ஒரே நாளில் குற்றவாளியைக் கைது செய்த தனிப் படையினரை காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.