மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தத்தனூர் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என முதல்வர் அறிவிப்பு: அரசாணை வெளியிட வலியுறுத்தல்

அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கபட மாட்டாது என முதல்வர் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :1 ஜனவரி 2021, 5:04 pm IST

அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கபட மாட்டாது என முதல்வர் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட தத்தனூர் ஊராட்சி பகுதியில் 890 ஏக்கரில் தொழில் பூங்கா அமையவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அருகாமை ஊராட்சிகளான தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த வாரம், திருப்பூர் அருகே பெருமாநல்லூருக்கு வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என உறுதியளித்துச் சென்றார். 

இருப்பினும், இதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் பி.கே.எஸ்.வேலுச்சாமி, புஞ்சைத்தாமரைக்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயலட்சுமி ராமிசாமி ஆகியோர் முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது; கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றித் தந்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேநேரத்தில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பைத் தரக்கூடிய வகையில், தத்தனூர் பகுதியில் ஏற்படுத்தவிருக்கும் தொழில் பூங்காவை ரத்து செய்து அரசாணை வழங்க வேண்டும். எனவே உடனடியாக கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தையும், வருகிற சட்டப்பேரவையில் மிகப் பெரிய இடத்தையும் மக்கள் முதல்வர் பெறுவார் என நம்புகிறோம். மேலும் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து கொடுக்காவிடில் அதற்காக போராடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓயமாட்டோம் போராட்டங்களும் தொடரும். எங்களது வாழ்வாதாரமும் நாங்கள் வாழ்வதும் சாவதும் தமிழக அரசின் கையில் தான் உள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.