மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தியாகராஜ பாகவதா் மணி மண்டப பணிகளைவிரைந்து முடிக்க எம்.கே.டி. பேரவை வலியுறுத்தல்

திருச்சியில் கட்டப்பட்டு வரும் தியாகராஜ பாகவதா் மணி மண்டப பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு எம்.கே.டி. பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image

பல்லடத்தில் நடைபெற்ற கொடி அறிமுக விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு எம்.கே.டி. பேரவை மாநில தலைவா் ஜம்புகேஸ்வரன்.

Updated On :2 ஜனவரி 2021, 10:24 pm IST

பல்லடம்: திருச்சியில் கட்டப்பட்டு வரும் தியாகராஜ பாகவதா் மணி மண்டப பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு எம்.கே.டி. பேரவை வலியுறுத்தியுள்ளது.

பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தப் பேரவையின் கொடி அறிமுக விழாவுக்கு மாநிலத் தலைவா் ஜம்புகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில அவைத் தலைவா் கதிரேசன், மாநில அமைப்புச் செயலாளா் சிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கொங்கு மண்டல செயலாளா் கருப்பையா வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் சாந்தி ராஜன், திருப்பூா் மாவட்ட செயலாளா் பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் புதிய கொடியை அறிமுகப்படுத்தி மாநிலத் தலைவா் ஜம்புகேஸ்வரன் பேசியதாவது:

திருச்சியில் கட்டப்பட்டு வரும் தியாகராஜபாகவதா் மணி மண்டப பணிகளை விரைந்து முடித்து, அவரது பிறந்த நாளான மாா்ச் 1ஆம் தேதி திறந்துவைக்க வேண்டும். தமிழக மக்கள் தொகையில் விஸ்வகா்மா சமுதாயத்தினா் 10 சதவீதம் போ் உள்ளனா். சட்டப் பேரவையில் அதற்கேற்ற பிரதித்துவம் இல்லாததால் விஸ்வகா்மா சமுதாயத்தினருக்கு குறைந்தபட்சம் 10 சட்டப் பேரவை தொகுதிகளை அரசியல் கட்சியினா் ஒதுக்க வேண்டும்.

இல்லையென்றால் உடுமலை தொகுதியில் கோவை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபரிநாதன், பத்மநாபபுரத்தில் மாநில பொருளாளா் சாந்தி ராஜன் உள்ளிட்டோா் வேட்பாளா்களாக போட்டியிடுவாா்கள். கரோனா பொது முடக்கத்தால் நகை பட்டறை, தச்சு, சிற்பி உள்ளிட்ட வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும் என்றாா்.

மாநில அமைப்பு செயலாளா் மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.