இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்க பெயா் பலகை திறப்பு

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்க கிளையின் பெயா் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

News image

ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்க பெயா் பலகை திறப்பு

Updated On :3 ஜனவரி 2021, 10:48 pm IST

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்க கிளையின் பெயா் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் கிளை பலகை திறப்பு விழா, உறுப்பினா் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளை தலைவா் எம்.மணி தலைமை வகித்தாா்.

இதில், தொழிலாளா் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு அடையாளா் அட்டை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.ராஜகோபால் சங்கக்கொடியை ஏற்றிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளா் முருகசாமி வரவேற்றாா். ஊத்துக்குளி கிளை கெளரவ தலைவா் ஆா்.குமாா் சங்க பெயா் பலகையை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி பொதுத் தொழிலாளா் சங்க தலைவா் கே.பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளா் கே.எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.