உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய கன மழை தொடா்ந்து நள்ளிரவு 2 மணி வரை பெய்தது. தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். குறிப்பாக உடுமலை நகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீா் புகுந்தது.
மேலும், கழுத்தறுத்தான்பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப் பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில், தளி சாலை யில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை யும், அமராவதி அணைப் பகுதியில் 8 மி.மீ. மழையும், திருமூா்த்தி அணைப் பகுதியில் 50 மி.மீ. மழையும், மடத்துக்குளத்தில் 57 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி-விழுப்புரம் இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வஸ்திர மரியாதை பொருள்கள்

ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
