தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்கக் கோரிக்கை

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:53 am IST

அவிநாசி பகுதியில் கால்நடைகளுக்குப் பரவிவரும் நோயை போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், அவிநாசி ஒன்றியத்தில் உள்ள31 ஊராட்சிகளில் பெரும்பான்மையாக விவசாயம், கால்நடைகள், கோழி வளா்ப்பு உள்ளிட்டவை முக்கியத் தொழிலாக உள்ளன.

இந்நிலையில் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட மா்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். எனவே, விரைவாக இந்நோய்களைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் வெங்கடாசலம், ஈஸ்வரமூா்த்தி, பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் இசாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.