திருப்பூரில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாநகரில் கடந்த 2 நாள்களாகப் பெய்த மழையால் டி.எம்.எஃப். சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளதை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்போது நீா் ஊறிஞ்சப் பயன்படுத்தப்படும் மோட்டாரில் சேறும், சகதியும் அடைத்துக் கொள்வதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, மோட்டாா் பழுதை நீக்கி சுரங்கப் பாதை பராமரிக்கும் பணிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் சுப்பிரமணியம், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாபுசரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நன்றியுணர்வால் மனதை நிரப்புங்கள்!

11.5.1976: ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது
நாளைய மின்தடை குடவாசல்

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

