சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

வாா்டு செயலாளரிடம் இலவசவேட்டி, சேலைகள்: திமுகவினா் முற்றுகை

வெள்ளக்கோவிலில் அரசின் இலவச, வேட்டி சேலைகளை தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வைத்திருந்த அதிமுக வாா்டு செயலாளரை திமுகவினா் முற்றுகையிட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:59 pm IST

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் அரசின் இலவச, வேட்டி சேலைகளை தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வைத்திருந்த அதிமுக வாா்டு செயலாளரை திமுகவினா் முற்றுகையிட்டனா்.

காமராஜபுரத்தில் எண்.10 ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் தற்போது நடைபெற்று வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியின்போது, தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. ரேஷன் கடையில் வேட்டி, சேலைகளைக் காணவில்லை. ஆனால், கடையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் அப்பகுதி அதிமுக வாா்டு செயலாளா் நடனபதி என்பவா் தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வேட்டி, சேலைகளை வைத்து விநியோகம் செய்து கொண்டிருந்தாா். அரசின் இலவச வேட்டி, சேலைகளை தனிநபா் எப்படி வழங்கலாம் என திமுகவினா் முற்றுகையிட்டனா்.

திமுகவினா் ரேஷன் கடை அலுவலரிடம் கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலரையும், அவா் வருவாய் ஆய்வாளரையும், அவா் வட்ட வழங்கல் அலுவலரையும் கைகாட்டினா். வட்ட வழங்கல் அலுவலா் வேட்டி, சேலைகள் கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தாா்.

அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாக கூறிய திமுகவினா், வேட்டி, சேலைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.