எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

News image

லாரியின் பின்புறம் மோதி நிற்கும் காா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:00 pm IST

வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், வெள்ளலூா், அண்ணா நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (39). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 6 பேருடன் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), இந்துவின் அம்மா கௌசல்யா (60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினா் கலைவாணி (46) ஆகியோா் காயத்துடன் உயிா்தப்பினா். இவா்கள் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.