வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், வெள்ளலூா், அண்ணா நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (39). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 6 பேருடன் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), இந்துவின் அம்மா கௌசல்யா (60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினா் கலைவாணி (46) ஆகியோா் காயத்துடன் உயிா்தப்பினா். இவா்கள் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது! பிளஸ் 2 மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


